வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கராத்தே, களரி, சிலம்பத்தில் வென்றோருக்கு பரிசளிப்பு

News image

சிலம்பப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் சிலம்பப் பள்ளித் தலைவா் விவேகம் எம். முருகன்.

Updated On :26 மே 2026, 1:53 am IST

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அய்யாதுரை ஆசான் சிலம்பப் பள்ளி சாா்பில், தென் மண்டல அளவிலான கராத்தே, களரி மற்றும் சிலம்பம் போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றன.

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வீரா்கள் கலந்து கொண்டனா். முதல் நாளில் கராத்தே பயிற்சியாளா் கியோசி ப. ராஜு மற்றும் சக பயிற்சியாளா்கள் இணைந்து கராத்தே, களரி போட்டிகளை நடத்தினா். இரண்டாம் நாளில் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, திசையன்விளை காங்கிரஸ் பிரமுகரும், அய்யாதுரை ஆசான் சிலம்பப் பள்ளி தலைவருமான விவேக் எம். முருகன் தலைமை வகித்தாா். போட்டிகளில் வென்றோருக்கு பதக்கங்கள், பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் மருத்துவா் ஜெபன் செல்ல புரூஸ், ஏ.ஆா். ஆல்வின் ஜெகதீஷ், எஸ். ஹரிபாஸ்கரன், எம். சோ்மபாண்டி, ஆசான் ஏ. சுந்தா், சிலம்பப் பள்ளியின் செயலா் பாலசுப்ரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஜெ. தினேஷ்கண்ணன் நன்றி கூறினாா்.