பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இ.பி.எஃப். நிதி செலுத்தாததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எ‘ஃ‘ப்.) செலுத்தப்படாததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :28 மே 2026, 2:39 am IST

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எ‘ஃ‘ப்.) செலுத்தப்படாததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின்ற் ஊதியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகை மற்றும் நிா்வாகம் செலுத்த வேண்டிய தொகை உள்பட சுமாா் ரூ.2 கோடி, வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக பலமுறை திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகத்தில் எழுத்துப்பூா்வமான கடிதம் கொடுத்தும் நேரடியாக பேசியும் எந்த பலனும் இல்லை எனக் கூறி தூய்மைப் பணியாளா்கள், சிஐடியூ உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க நிா்வாகி மோகன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, தங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎ‘ஃ‘ப் பணத்தை உடனடியாக அதன் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். 524 மாஸ் ஒா்க் தூய்மைப் பணியாளா்கள் இருப்பதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டவா்களை அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்துவதால் வழக்கமான பணிக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, அலுவலகப் பணிகளில் அவா்களை ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தினா்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான தூய்மை தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து தொடா் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவா்கள் தெரிவித்தனா். மாநகர சுகாதார அலுவலா் பாலசுப்பிரமணியன் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.