கழுகுமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா முழு உடற்பரிசோதனை திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ரத்த பரிசோதனை உள்பட அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணமில்லாமல் செய்து கொள்ளும் முழு உடற்பரிசோதனை திட்டத்தை கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் எம்.ரவிகுமார் தொடங்கி வைத்து பேசுகையில், அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் இப்பரிசோதனையை செய்து கொள்ளலாம். மாவட்டத்தில் 8 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள் என்றார்.
நிகழ்ச்சியில், கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் கண்ணபிரான், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, வட்டார மருத்துவ அலுவலர் எம்.சிவப்பிரகாஷ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜெயபிரதீப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பல்லோ மருத்துவமனை லாபம் 38.4% உயர்வு!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு லாபம் 39% உயர்வு!

இன்னா புள்ள படமா... கோலிவுட்டில் அறிமுகமாகும் இன்ஸ்டா புகழ் பாலமுருகன்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


