எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்செந்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செந்தூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:29 pm

DIN

திருச்செந்தூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் எதிரில், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலையோர சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பறை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) பாலச்சந்திரன் தலைமை வகித்தார்.  நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர்  வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இதையொட்டி வாகன ஓட்டிகளுக்கு, உங்களுக்காக ஐந்து நிமிடம் என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், போக்குவரத்து காவலர்கள் ஜெயகாந்தன், மணிமாறன், ரஞ்சித்குமார் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் ல.நந்தக்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.