அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு,  சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார்.  செயலர் கேசவன் கூட்டறிக்கையை வாசித்தார்.  பொருளாளர் ராசையா வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  8ஆவது ஊதியக் குழு ஓய்வூதிய அரசாணை 313  சம்பந்தமாக ஓய்வூதியம் கணக்கிடும் முறை குறித்து சங்கத் துணைத் தலைவர் ராஜாமணி விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், 1-1-2016  முதல் 30-9-2017 வரை ஓய்வூதிய நிலுவைத் தொகையை  உடனே வழங்க வேண்டும்.  மருத்துவப் படியை  மத்திய அரசு போல் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  சங்க உறுப்பினர் ஜனகராஜ் வரவேற்றார்.  கோபாலகிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com