சாத்தான்குளம் வட்டார பள்ளிகளில் வட்டார வளமைய குழுவினர் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சாத்தான்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மீ.மகேஸ்வரிதலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கொண்ட குழுவினர் சாத்தான்குளம் வட்டார வளமையத்திற்கு உள்பட்ட 158 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பள்ளி வளாகத் தூய்மை, குடிநீர் தொட்டி தூய்மைப்படுத்திய விவரம் மற்றும் நிலவேம்புக் குடிநீர் மாணவர்களுக்கு வழங்கிய விவரம் ஆகியவை பார்வையிடப்பட்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.