காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூரில் கடந்த 5ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 147 பேர் மீது தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏப். 5ஆம் தேதி தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முழு வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. திருச்செந்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம், மெயின் ரோடு வழியாக வந்து திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து பழனி ரயில் முன் மறியல் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக கூடி, அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக வி.ஏ.ஒ. கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 147 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

