காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிபாரதம் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலர் சே. சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏ. மதுரைவீரன், மாவட்ட துணைச் செயலர் அரசூர் சேர்மத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்டச் செயலர் சி.எம். முத்துபாண்டியன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் து. இசக்கிமுத்து, மாவட்ட இளைஞரணிச் செயலர் வீர. சுடலைமுத்துபாண்டியன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் எம். செந்தில்குமார், நெல்லை மாவட்ட துணைச் செயலர் முனிஸ்வரன், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர்ராஜ், துணைத் தலைவர் சிவாபீட்டர், ஒன்றியப் பொருளாளர் ஏ. சரவணகுமார், நகர துணைச் செயலர் எம். அஜித்ராஜா, ஒன்றிய இளைஞரணிச் செயலர் பிரபாகரன், கிளைச் செயலர் நயினார், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சாத்தான்குளம் ஒன்றியச் செயலர் எம். முத்துக்குட்டி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

