விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் நிலத் தகராறில் விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் சண்முகவேல் (60). இவர் தற்போது தூத்துக்குடியில் வசித்து வருகிறார். ராமச்சந்திராபுரத்தில் உள்ள இவருடைய விவசாய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் போலி ஆவணங்களை தயார்செய்து ஆக்கிரமித்திருந்தனராம்.
இதையறிந்த சண்முகவேல், ராமச்சந்திராபுரத்துக்கு சென்று தன்னிடம் உள்ள ஆவணங்களை காட்டி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ், செந்தூர், முருகானந்தம், மையில்ராஜ் ஆகிய 4 பேர் சேர்ந்து சண்முகவேலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சண்முகவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாக்கியதாகக் கூறப்படும் 4 பேர் மீதும் விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் செய்திகள் - நேரலை!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!

இன்று யாருக்கு சாதகம்? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

