விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் நிலத் தகராறில் விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் சண்முகவேல் (60). இவர் தற்போது தூத்துக்குடியில் வசித்து வருகிறார். ராமச்சந்திராபுரத்தில் உள்ள இவருடைய விவசாய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் போலி ஆவணங்களை தயார்செய்து ஆக்கிரமித்திருந்தனராம்.
இதையறிந்த சண்முகவேல், ராமச்சந்திராபுரத்துக்கு சென்று தன்னிடம் உள்ள ஆவணங்களை காட்டி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ், செந்தூர், முருகானந்தம், மையில்ராஜ் ஆகிய 4 பேர் சேர்ந்து சண்முகவேலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சண்முகவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாக்கியதாகக் கூறப்படும் 4 பேர் மீதும் விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

