வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:50 am

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரியின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு,  கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.  கோவில்பட்டி போக்குவரத்து உதவி- ஆய்வாளர் சுடலைமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு,  சாலைப் பாதுகாப்பின் அவசியம்,  சாலை விபத்துக்கான காரணங்கள் குறித்தும்,  ஓட்டுநர் உரிமம் பெறாமலும், தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டக்கூடாது என்றும்,  இருசக்கர வாகனத்தில் 3  பேர் பயணிக்கக் கூடாது. அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விபத்துக்களை தடுக்க ஒவ்வொருவரும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர். 
ஓய்வுபெற்ற வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.  பேராசிரியர் தம்பா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.