சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு பரிசளிப்பு

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:11 am

DIN

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ நாரயணகுரு கல்வி வளர்ச்சிக் குழு சார்பில்,  புதுக்கிராமம் பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்,  மாணவிகளை  ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு,  குழுத் தலைவர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். அருள்பாக்கியராஜ்,  கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  குழுச் செயலர் பி.சங்கர்  மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். 
நிகழ்ச்சியில்,  பள்ளிச் செயலர் சோ.சங்கரன்,  பள்ளி மாணவர், மாணவிகள், பெற்றோர்கள், குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.  மாரிக்கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.