நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆள்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கான ஆள்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூலை 2018, 2:07 am

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கான ஆள்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 53 இடங்களுக்கான ஆள்கள் தேர்வு,தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் தூத்துக்குடியில் இருந்து 339 பேரும், கோவில்பட்டியில் இருந்து 324 பேரும், திருச்செந்தூரில் இருந்து 210 பேரும், பெண்கள் 47 பேரும் என மொத்தம் 920 பேர் கலந்துகொண்டனர். பல்வேறு கட்ட உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 53 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கெளசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.