உடன்குடி கொட்டங்காடு வீரலட்சுமிபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் ஆடிமாதத் திருவிழா மற்றும் கூழ்படையல் பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஜூலை 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 8 .30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, கூழ்படையல் பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் உள் பிரகார சப்பர பவனி, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, அன்னதானம் போன்றவை நடைபெற்றது.
ஆடி மாதம் முழுவதும் இரவு 7 மணிக்கு கூழ்படையல் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ.கு.பெ. சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







