உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கோவில்பட்டியில் இன்று நடைபெறவிருந்த  காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

கோவில்பட்டி பிரதான சாலையில் நீர்வரத்து ஓடையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற

Updated On :24 ஜூலை 2018, 12:53 am IST

கோவில்பட்டி பிரதான சாலையில் நீர்வரத்து ஓடையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை(ஜூலை 24) நடைபெறவிருந்த காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
கோவில்பட்டி பிரதான சாலையில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை,  மாநில வருவாய் நிர்வாக ஆணையம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், வருவாய் வட்டாட்சியர் உத்தரவின்படி நீர்வரத்து ஓடையில் உள்ள 123  கட்டடங்களுக்கான வரி விதிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையரால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் தற்போது வரை அகற்றப்படவில்லை.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளின் செயலை கண்டித்து,   நல்லிணக்க பண்பாட்டுக் கழகம்,  5ஆவது தூண் அமைப்பு, அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்   நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 இது தொடர்பான சமாதானக் கூட்டம்,  கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பரமசிவன் தலைமையில் நடைபெற்றது.  அருள்மிகு பூவனநாத சுவாமி கோயிலுக்கு உரியதான ஆக்கிரமிப்பில் உள்ள 108 கடைகளையும் உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மீதமுள்ள 26  கடைகளுக்கு இந்த வாரத்திற்குள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வட்டாட்சியரால் எடுக்க வேண்டும்,  எடுக்கப்பட்ட விவரத்தை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.