இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விருது பெற்ற செவிலியருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் விருது பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா நடைபெற்ற

Updated On :14 மே 2018, 7:19 pm

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் விருது பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
உலக செவிலியர் தினம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பாக சேவை புரிந்த 251செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் விஜயலட்சுமியும் விருது பெற்றார். இதையடுத்து விருது பெற்ற விஜயலட்சுமிக்கு பாராட்டு விழா மருத்துவமனை கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி தலைமை வகித்தார். மருத்துவர் மோசஸ்பால் முன்னிலை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், விருது பெற்ற செவிலியருக்கு பரிசு வழங்கினார். இதில், மருத்துவர் தேவசேனா, செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.