தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் விருது பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
உலக செவிலியர் தினம் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பாக சேவை புரிந்த 251செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் விஜயலட்சுமியும் விருது பெற்றார். இதையடுத்து விருது பெற்ற விஜயலட்சுமிக்கு பாராட்டு விழா மருத்துவமனை கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி தலைமை வகித்தார். மருத்துவர் மோசஸ்பால் முன்னிலை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், விருது பெற்ற செவிலியருக்கு பரிசு வழங்கினார். இதில், மருத்துவர் தேவசேனா, செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

