வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும்: முகமது அபுபக்கர் எம்எல்ஏ

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலரும்,

Updated On :14 மே 2018, 7:17 pm

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ. குமரெட்டியாபுரம் கிராமத்தில் 92 ஆவது நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர் திங்கள்கிழமை கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.