தூத்துக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை மின்னல் தாக்கியதில் பெண் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 240 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதிகபட்சமாக காயல்பட்டினம் பகுதியில் 62 மி.மீ., திருச்செந்தூர் பகுதியில் 57 மி.மீ., சாத்தான்குளம் பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 28 மி.மீ., சூரங்குடியில் 13 மி.மீ, குலசேகரன்பட்டினத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியது.
இந்நிலையில், தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் உப்பளத் தொழிலாளி சேர்மபாண்டி (37) வீட்டில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சேர்மபாண்டி, அவரது மனைவி தேவிகா (32), மகள்கள் கீர்த்தனா(11), பிருந்தா (7) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேவிகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மூவரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

