தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

கோவில்பட்டி அருகே விபத்து: காவலர் படுகாயம்

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:01 am IST

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த அழகுமுத்தையா மகன் ராமகிருஷ்ணன்(34). இவர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.  பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் நாலாட்டின்புத்தூர் - கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தாராம். நாலாட்டின்புத்தூர் - கழுகுமலை சாலையில் துணை மின்நிலையம் அருகே சென்றபோது, பழுதாகி நின்ற லாரியில்
மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராமகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ராமகிருஷ்ணனுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.