தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயராக ஸ்டீபன் அந்தோணி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ தூத்துக்குடி மறை மாவட்ட ஆயராக இருந்த இவோன்அம்புரோஸ் உடல்நிலை காரணமாக பணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய ஆயராக வேலூர் மறை மாவட்டத்தில் பணியாற்றிய ஸ்டீபன்அந்தோணி நியமனம் செய்தார். தூத்துக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ஆயர் ஸ்டீபன்அந்தோணியை பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து அலங்கரித்த வாகனத்தில்ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஊர்வலம் தூத்துக்குடி திரு இருதயங்களின் பேராலய வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போஸ்தலிக்க பரிபாலகரான முன்னாள் ஆயர் இவோன்அம்புரோஸ் புதிய ஆயர் ஸ்டீபன் அந்தோணிக்கு திருநிலைப்படுத்தி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, அதிமுக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன், தமிழகம் முழுவதும் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவப் பேராயர்கள், தூத்துக்குடி மாநகர கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் - நேரலை!

50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாங்கிய நிலம்! 11 மடங்கு விலை உயர்ந்தது எப்படி?

பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது - புகைப்படங்கள்

கேரள முதல்வராக சதீசன் பதவியேற்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
