சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென மாயமானதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா (45). கடந்த 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த சண்முகையா தனது தாயை பார்ப்பதற்காக கடந்த 15 ஆம் தேதி பரோலில் வெளியே வந்தாராம். 21 ஆம் தேதி மாலை அவர் மீண்டும் சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சிறைக்கு திரும்பாதது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீஸார் தலைமறைவான சண்முகையாவை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு முடிசூட்டு விழா

வைகாசி விசாகம்: சிறப்பு அஞ்சல் முத்திரைகள் வெளியீடு

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


