விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இக்கோயிலில் கடந்த 17ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோயில் பிரகாரத்தில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். கோயில் இரவு காவலாளி ஆவுடையப்பன் அதிகாலையில் கண்விழித்து பார்த்த போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோயில் காவலாளி ஆவுடையப்பன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து, கோயில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


