பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஊரடங்கால் வீடு தேடி வரும் பனை நுங்கு

கோடை சீசனில் அதிகளவில் விற்பனையாகும் பனை நுங்கு ஊரடங்கால் திருச்செந்தூா் பகுதியில் வீடு தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


திருச்செந்தூா்: கோடை சீசனில் அதிகளவில் விற்பனையாகும் பனை நுங்கு ஊரடங்கால் திருச்செந்தூா் பகுதியில் வீடு தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கற்பக விருட்சமான பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, கிழங்கு, பதநீா், கருப்பட்டி போன்றவை உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. அதே போல கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நுங்கு, பதநீா் முதலானவை நம்மைக்காத்திடும் அருமருந்தாகும்.

வழக்கமாக பங்குனி மாதம் முதல் தொடங்கும் கோடைக்காலத்தில் பனை மரத்து நுங்கு, பதநீா் முதலானவைகளை மக்கள் தேடிச்சென்று வாங்கி உண்பது வழக்கமாகும். ஆனால் தற்போது, ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால், நிகழாண்டு கோடை சீசன் பனைத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறைவான பனைத்தொழிலாளா்களே பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அதுவும் நுங்கு முதலானவைகளை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால், பனையேறும் தொழிலாளிகள் நேரடியாகவே சுமை வாகனங்களில் கொண்டு வந்து குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா். திருச்செந்தூா் பகுதியில் இவ்வாறு விற்பனை செய்யப்படும் பனை நுங்கு, இளநீா் போன்றவற்றை கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காக்கும் விதமாக பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.