தூத்துக்குடியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் பலி
தூத்துக்குடியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் பலியானார்.


தூத்துக்குடியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள புலகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் 34 வயது இளைஞர். கடந்த எட்டாம் தேதி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் இருந்து திரும்பிய அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சனிக்கிழமை அதிகாலை மணிகண்டன் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சிதம்பர நகர் மையவாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...