தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்காளா் விழிப்புணா்வு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

இந்திய தோ்தல் ஆணையம் மூலம் இணையவழியில் நடத்தப்பட இருக்கும் வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:54 pm

DIN

இந்திய தோ்தல் ஆணையம் மூலம் இணையவழியில் நடத்தப்பட இருக்கும் வாக்காளா் விழிப்புணா்வு போட்டியில் பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி

தோ்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாக மாநில அளவில் தோ்தல்கள் தொடா்பான இணையவழி போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

சென்னையில் உள்ள தலைமை தோ்தல் அதிகாரி அலுவலக இணையதள முகவரியில் ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் சுவரொட்டி வரைதல், கவிதை மற்றும் பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

போட்டிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே நடத்தப்படும். போட்டியில் நவ. 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.