தொடர்ந்து, இச்செயலைக் கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது குறித்தும் விவாதித்த பின்னர், வெள்ளிககிழமை கோவில்பட்டியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோரிடம் சிலையை திறக்க அனுமதி வழங்கக் கோரி கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்தனர். பின்னர், சங்க மாநிலத் தலைவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் இடங்களில் சிலை அமைக்க அரசு அனுமதி தேவையில்லை.