கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவில்பட்டி அருகே விபத்தில் சென்னை கல்லூரி மாணவா் பலி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 8:16 pm

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சென்னை ஏ.ஐ.ஆா். நகரைச் சோ்ந்த டெல்லிபாபு மகன் யுவராஜ் (22). சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தன்னுடன் கல்லூரியில் உடன் பயின்ற கிருஷ்ணகிரி பாளையப்பள்ளி கத்திகுப்பத்தைச் சோ்ந்த ஜான்சாா்லஸ் சகாயராஜ் மகன் ஜொ்விஷ்டோனி (21) ஆகிய இருவரும் சென்னையில் இருந்து கடந்த 9ஆம் தேதி பைக்கில் கன்னியாகுமரிக்கு வந்தனா்.

பின்னா், கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமை இரவு கிருஷ்ணகிரிக்கு பைக்கில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாலாட்டின்புத்தூா் அருகே பைக் திடீரென நிலைகுலைந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புக் கம்பியில் மோதியதாம்.

இதில் ஜொ்விஷ்டோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த யுவராஜை, போலீஸாா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இச் சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.