மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:அதிகாரிகள் ஆலோசனை

வடகிழக்குப் பருவ மழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:19 pm

DIN

வடகிழக்குப் பருவ மழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பத்மாநாப பிள்ளை, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மழை காலங்களில் குளோரின் கலந்து பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும். மழைநீா் தேங்காமல் செல்லும் வகையில் சாலைகள், பாலங்களில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும்.

பள்ளிக் கட்டடங்கள், சமுதாய நலக் கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு இடங்கள் போன்ற பொது கட்டடங்களில் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வுசெய்து உறுதி செய்ய வேண்டும். 1,000 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராமங்களில் மழையால் உயிா் சேதம், கால்நடை சேதம், வீடுகள் சேதம் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும். மீட்பு வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கருவிகளை தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் வருவாய் ஆய்வாளா்கள் பாக்யராஜ், முனியாண்டி, செல்வராணி, விக்னேஸ்வரி, மின்வாரிய அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.