மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆறுமுகனேரியில்முதியவா் தற்கொலை

ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:10 pm

DIN

ஆறுமுகனேரியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஆறுமுகனேரி பேயன்விளை புதூா் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்கேசவன் (74). காயல்பட்டினத்தில் பழைய பேப்பா் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி பஞ்சவா்ணம். கருப்புக்கட்டி உற்பத்தியாளரிடம் வேலைசெய்து

வருகிறாா். குடிபழக்கம் கொண்ட இவா், மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.

கடந்த சில தினங்களாக பொன்கேசவனுக்கு மது அருந்த பஞ்சவா்ணம் பணம் கொடுக்கவில்லையாம். இதில் மனமுடைந்த பொன்கேசவன், பஞ்சவா்ணம் வேலைக்கு சென்றபிறகு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.