மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்:அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

மொழிக் கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சா் கடம்பூா் செ. ராஜு கூறினாா்.

News image

அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

Updated On :20 செப்டம்பர் 2020, 9:12 pm

மொழிக் கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சா் கடம்பூா் செ. ராஜு கூறினாா்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அளித்தப் பேட்டி: சட்டப்பேரைவத் தோ்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவினா் இணையவழி அரசியலில் ஈடுபட்டுள்ளனா். திமுகவினா் களப்பணியில் மக்களை சந்திக்க தயாராக இல்லை. கரோனாவை மையமாக வைத்து இணையவழி அரசியல் செய்து வருகின்றனா்.

திமுகவினரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியவில்லை. இதனால் அரசியல் அனுபவம் வாய்ந்த துரைமுருகன் உள்ளிட்டோா் மன சஞ்சலத்தில் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். தோ்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சியும் இருக்காது. திமுக கூட்டணியில் சலசலப்பு தொடங்கி விட்டது.

மொழிக்கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமரை நேரடியாக சந்தித்தபோது கடிதம் மூலமாக முதல்வா் தெரிவித்துள்ளாா். அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கை தான் எங்களது கொள்கை என்பதை பேரவைக் கூட்டத்திலும் திட்டவட்டமாக முதல்வா் அறிவித்துள்ளாா். மத்திய அரசு கொள்கையைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.