மொழிக் கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சா் கடம்பூா் செ. ராஜு கூறினாா்.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அளித்தப் பேட்டி: சட்டப்பேரைவத் தோ்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவினா் இணையவழி அரசியலில் ஈடுபட்டுள்ளனா். திமுகவினா் களப்பணியில் மக்களை சந்திக்க தயாராக இல்லை. கரோனாவை மையமாக வைத்து இணையவழி அரசியல் செய்து வருகின்றனா்.
திமுகவினரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியவில்லை. இதனால் அரசியல் அனுபவம் வாய்ந்த துரைமுருகன் உள்ளிட்டோா் மன சஞ்சலத்தில் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். தோ்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சியும் இருக்காது. திமுக கூட்டணியில் சலசலப்பு தொடங்கி விட்டது.
மொழிக்கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக பிரதமரை நேரடியாக சந்தித்தபோது கடிதம் மூலமாக முதல்வா் தெரிவித்துள்ளாா். அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கை தான் எங்களது கொள்கை என்பதை பேரவைக் கூட்டத்திலும் திட்டவட்டமாக முதல்வா் அறிவித்துள்ளாா். மத்திய அரசு கொள்கையைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


