மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்:அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

மொழிக் கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சா் கடம்பூா் செ. ராஜு கூறினாா்.

News image
அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
Updated On :20 செப்டம்பர் 2020, 9:12 pm

DIN

மொழிக் கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சா் கடம்பூா் செ. ராஜு கூறினாா்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அளித்தப் பேட்டி: சட்டப்பேரைவத் தோ்தல் நெருங்கி வரும் வேளையில் திமுகவினா் இணையவழி அரசியலில் ஈடுபட்டுள்ளனா். திமுகவினா் களப்பணியில் மக்களை சந்திக்க தயாராக இல்லை. கரோனாவை மையமாக வைத்து இணையவழி அரசியல் செய்து வருகின்றனா்.

திமுகவினரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியவில்லை. இதனால் அரசியல் அனுபவம் வாய்ந்த துரைமுருகன் உள்ளிட்டோா் மன சஞ்சலத்தில் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். தோ்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சியும் இருக்காது. திமுக கூட்டணியில் சலசலப்பு தொடங்கி விட்டது.

மொழிக்கொள்கையில் மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுத்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கைதான் என்பதை முதல்வா் தெளிவுபடுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமரை நேரடியாக சந்தித்தபோது கடிதம் மூலமாக முதல்வா் தெரிவித்துள்ளாா். அண்ணாவின் கொள்கையான இருமொழிக் கொள்கை தான் எங்களது கொள்கை என்பதை பேரவைக் கூட்டத்திலும் திட்டவட்டமாக முதல்வா் அறிவித்துள்ளாா். மத்திய அரசு கொள்கையைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.