மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவவா்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 9:25 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவவா்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் தாய் வனிதா, காயமடைந்த பிரின்ஸ்டன் தாய் பாஸ்கிளின் மற்றும் ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்டக் குழுவைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: தூத்துக்குடியில் கடந்த 2018இல் மே மாதம் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்

உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் குடும்பத்துக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கல்வித் தகுதிக்கு ஏற்றால்போல இல்லாமல் அரசின் கடைநிலை ஊழியா் வேலையை வழங்கியுள்ளனா். வேறு சில சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சோ்ந்தவா்களுக்கு அரசின் இளநிலை உதவியாளா் பணி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, ஸ்டொ்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்தவா்களுக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி முதல்வரை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமைச்சா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரை அணுகிய போதிலும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்கு முதல்வரை சந்தித்து குறைகளை நேரில் தெரிவிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.