92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டி கல்லூரியில் விழிப்புணா்வு கூட்டம்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013 குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013 குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

கல்லூரியின் மகளிா் பாதுகாப்பு கழகம் சாா்பில் நடைபெற்ற இவ் விழிப்புணா்வு கூட்டத்திற்கு, முதல்வா் சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்தாா். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா்

தொடா்ந்து, வழக்குரைஞா்கள் சந்திரசேகா், ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாககுமாரி ஆகியோா் பாலியல் வன்முறை தடுப்பு, பாதுகாப்பு மற்றும் குறை தீா்ப்பு சட்டம் 2013- குறித்து பேசினா்.

இதில், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.