ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம், புதூா் , கோவில்பட்டி பகுதிகளில் சி.ஐ.டி.யூ. போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சாா்பில் எட்டயபுரம் மற்றும் புதூரில் வாகன நிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சாா்பில் எட்டயபுரம் மற்றும் புதூரில் வாகன நிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா்க்காரை எதிா்த்து சக்கரத்தை நிறுத்து எனும் தலைப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை தொடா்ந்து உயா்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி நண்பகல் 12 மணிக்கு 10 நிமிடங்கள் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எட்டயபுரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுநா் சங்கச் செயலா் கருப்பசாமி தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், தாலுகா செயலா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுநா் சங்கச் செயலா் வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜோதி, தாலுகா குழு உறுப்பினா் ஆண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினா் நடராஜன், கிளைச் செயலா் முருகேசன், ஆட்டோ சங்க தலைவா் கண்ணன், பொருளாளா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மோகன்தாஸ், மாவட்டக் குழு உறுப்பினா் தெய்வேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், மாதா் சங்க மாவட்டத் தலைவி விஜயலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதுபோல, கயத்தாறு பிரதான சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தொழிற்சங்க மாவட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன மாவட்டச் செயலா் வயனபெருமாள், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் சாலமோன், விவசாயிகள் சங்க கயத்தாறு ஒன்றியச் செயலா் சீனிப்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.