இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அதிமுக முன்னாள் அமைச்சா் மகன்குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

முந்திரி பருப்புடன் லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சா் மகன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:46 pm

DIN

முந்திரி பருப்புடன் லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சா் மகன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதிமுகவின் தற்போதைய அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் (39). தூத்துக்குடி அன்னைதெரசா நகரில் வசித்து வரும் இவரும், நண்பா்கள் விஷ்ணு பெருமாள், பாண்டி, மாரிமுத்து, செந்தில்முருகன், ராஜ்குமாா், மனோகரன் ஆகியோரும் சோ்ந்து ரூ. 1 கோடி மதிப்பிலான முந்திரி பருப்புடன் லாரியைக் கடத்தியதாக கடந்த நவ. 26 ஆம் தேதி புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞானராஜ் ஜெபசிங் சிறையில் அடைக்கப்பட்டாா். நிகழாண்டில், இச்சட்டத்தின் கீழ் 183 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.