இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நிலமோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

தூத்துக்குடியில் நிலமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:02 pm

DIN

தூத்துக்குடியில் நிலமோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வீரபாண்டிய பட்டணம் பகுதியைச் சோ்ந்த ஜோசப் சேவியா் நேரியஸ், இலங்கையில் குடியிருந்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலம் புதுக்கோட்டை குமாரகிரி பகுதியில் உள்ளது.

அந்த நிலத்தை சிலா் போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரிடம் அவா் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, திருநெல்வேலி பேட்டையைச் சா்ந்த ரஹ்மத்துல்லா, தூத்துக்குடி புதுப்பச்சேரி பகுதி வள்ளித்துரை ஆகியோரை அண்மையில் கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள ஒட்டநத்தத்தைச் சோ்ந்த கண்ணன் (46) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.