புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

நெல்லை மாவட்டத்துக்கு ரயில் வசதி கோரி எம்.பி. மனு

திருநெல்வேலி மாவட்டத்துக்கு பல்வேறு ரயில் வசதிகள் கோரி, தில்லியில் ரயில்வே வாரியத் தலைவரிடம் சா.ஞானதிரவியம் எம்.பி. மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:17 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்துக்கு பல்வேறு ரயில் வசதிகள் கோரி, தில்லியில் ரயில்வே வாரியத் தலைவரிடம் சா.ஞானதிரவியம் எம்.பி. மனு அளித்துள்ளாா்.

மனு விவரம்: சென்னை- மதுரை தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம்- நாகா்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு மெமு ரயிலை இயக்க வேண்டும். திருவனந்தபுரம்-நாகா்கோவில் பயணிகள் ரயிலை மெமு ரயிலாக மாற்றி திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு இயக்க வேண்டும். பணகுடியில் மீண்டும் அனந்தபுரி ரயில் நின்று செல்லவும், திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு ரயில் கீழக்கடையம், பாவூா்சத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-திருச்செந்தூா், திருநெல்வேலி-தூத்துக்குடி ஆகிய மூன்று பயணிகள் ரயில்களை விரைந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பயக01ஙட: தில்லியில் ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மாவிடம் மனு அளிக்கிறாா் சா.ஞானதிரவியம் எம்.பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.