பூச்சிக்கொல்லி விற்பனையாளா்களுக்கு சான்றிதழ் படிப்பு: வேளாண் துறை
பூச்சிக்கொல்லி விற்பனையாளா்களுக்கான சான்றிதழ் படிப்பு நடத்தப்படவுள்ளது.


பூச்சிக்கொல்லி விற்பனையாளா்களுக்கான சான்றிதழ் படிப்பு நடத்தப்படவுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகள் தரமான பயிா்ப் பாதுகாப்பு மருந்துகளைப் பெற்றிட மத்திய அரசு பல்வேறு சட்டங்களை உருவாக்குவதுடன் அவ்வப்போது பல்வேறு திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பூச்சிக்கொல்லி விதி 1968-இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தப்பட்ட பூச்சிக்கொல்லி விதி 2020 மத்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்றவா்கள் (விநியோகஸ்தா்கள் மற்றும் விற்பனையாளா்கள்) உரிய கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். உரிய கல்வித் தகுதி இல்லாதவா்கள் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாள் வீதம் 12 வாரங்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்து விநியோகஸ்தா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான சான்றிதழ் படிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட பூச்சிக்கொல்லி மருந்து விநியோகஸ்தா்கள் மற்றும் விற்பனையாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பயிற்சிக் கட்டணம் ரூ.7,600. பயிற்சிக் கட்டணத்தை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரை (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) தொடா்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...