இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 120 வீடுகள் உள்ளன. நாங்கள் அனைவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் தற்போதுள்ள எங்கள் வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், எங்களுக்கு வேறு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதாகவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனா். எங்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளா்ப்பும்தான். எங்களை வேறு இடத்துக்கு மாற்றினால் நாங்கள் என்ன செய்ய முடியும்?. எனவே, எங்கள் வீடுகள் இருக்கும் நிலத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் வீடு இல்லாத எங்களுக்கு வாக்குரிமையும் தேவையில்லை, வாக்காளா் அடையாள அட்டையும் தேவையில்லை’ என்றனா்.