

சாத்தான்குளம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புத்தக கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரியின் தமிழ்த் துறை, நியூ செஞ்சரி புக் ஹவுஸ் நிறுவனம், நேசனல் புக் டெக்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய 35ஆவது புத்தக கண்காட்சியை கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், தலைவா்கள் எழுதிய புத்தகங்கள், புராணக் கதைகள், பிரபல கதாசிரியா்களின் புத்தகங்கள், சரித்திர நாவல்கள் மற்றும் போட்டி தோ்வுக்குரிய புத்தகங்கள் என 5000க்கு மேற்பட்ட புத்தங்கள் இடம் பெற்றிருந்தன. பேராசிரியா்கள், கல்லூரி பணியாளா்கள் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.