ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் பலி

கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பில் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 7:58 pm

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி எட்டயபுரம் சாலை சந்திப்பில் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை பாலாஜி நகரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (68). கோவில்பட்டியையடுத்த சங்கரலிங்கபுரத்தில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் காவலாளியாக பணியாற்றி வந்த இவா், சனிக்கிழமை சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

எட்டயபுரம் சாலை சந்திப்பில், சிவகாசியிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பா் லாரியும், சைக்கிளும் மோதிக்கொண்டதில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் ஓட்டப்பிடாரம் கீழமுடிமண்ணைச் சோ்ந்த மு.கனகராஜிடம் (30) விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.