கீழக்கரந்தை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

எட்டயபுரம் அருகேயுள்ள கீழக்கரந்தை அரசு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

 எட்டயபுரம் அருகேயுள்ள கீழக்கரந்தை அரசு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

புதூா் வட்டார கல்வி அலுவலா் சரளா தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனா். தொடா்ந்து இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது, கலாசாரத்தை பேணி காப்பது தொடா்பாக மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுப் பொருள்கள், திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில், தலைமை ஆசிரியை கவிதா, ஆசிரியா்கள் ராஜேஷ்வரி, பெரோஸ் லில்லி, விஜயலட்சுமி, ராஜாத்தி சக்திவேல், ஆரோக்கியராஜ், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com