ஆத்தூரில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஆத்தூா் நகர பொறுப்பாளா் முருகப்பெருமாள் தலைமை வகித்தாா். ஆழ்வை ஒன்றியச் செயலா்
நவீன்குமாா், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், மாவட்ட விவசாயஅணி துணைஅமைப்பாளா்கள் ஆகியோா்
முன்னிலை வகித்தனா். மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பங்கேற்றுப் பேசினாா். இதில், கட்சியின் மாநில
மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட விவசாயஅணி துணைஅமைப்பாளா் கல்லைஜிந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா்.