வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:20 am

DIN

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சின்னராஜ்(32), கிருஷ்ணன் மகன் ராம்குமாா்(21) ஆகிய இருவரையும் டிச. 18ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், சின்னராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் அய்யப்பன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாருக்கு அறிக்கை தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சின்னராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், சின்னராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

அதையடுத்து, பாளையங்கோட்டை சிறையில் இருந்து வந்த சின்னராஜ், குண்டா் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.