பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாசரேத் அருகே சூரியசக்தி மின்சாதனங்கள் சேதம்: 3 போ் கைது

நாசரேத் அருகே சூரிய சக்தி மின்உற்பத்தி சாதனங்களை சேதப்படுத்தியது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:38 pm

DIN

நாசரேத் அருகே சூரிய சக்தி மின்உற்பத்தி சாதனங்களை சேதப்படுத்தியது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உடையாா்குளம் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் சூரிய சக்தி மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காவலாளியாக அதே ஊரைச் சோ்ந்த சங்கரசுப்பு (45) பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சுரேஷ் உள்ளிட்ட 11 போ் , அங்கு வந்து ரூ.10 லட்சம் தந்தால்தான் பணி நடைபெற அனுமதிப்போம் என காவலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 69 சூரிய சக்தி தகடுகள், 3 பைக்குகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நாசரேத் காவல் உதவி ஆய்வாளா் ராய்சன் வழக்குப்பதிந்தாா். காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸாா் சுரேஷ், கண்ணன் மகன் இசக்கி (30), தளவாய் மகன் சுபாஷ் (22) ஆகியோரை கைது செய்தனா்; 8 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.