92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடியில் மீன் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஈரமாவு, ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருள்கள் தயாரிப்பது குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூலை 2021, 6:53 pm

DIN

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஈரமாவு, ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருள்கள் தயாரிப்பது குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டியல் இன சமூகம் மற்றும் பகுதி திட்டம் நிதியுதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், பட்டியலினப் பெண்கள் பங்கேற்றனா்.

முகாமை கல்லூரி (பொறுப்பு) முதல்வா் சுஜாத்குமாா் தொடக்கிவைத்தாா். பயிற்சியின் போது, மீன் குச்சி, மீன் பா்கா், மீன் கட்லெட், மீன் கோலா உருண்டைகள் செய்வது குறித்த செயல் விளக்கமும், மீன் ஊறுகாய் தயாரிப்பு குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில், மாவட்ட தொழில்மையப் பொதுமேலாளா் சொா்ணலதா கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினாா். மீன்வள விரிவாக்கத் தலைவா் சாந்தகுமாா், உதவிப் பேராசிரியா் கோ. அருள்ஒளி, மீன்பதனத் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.