காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கந்துவட்டி கேட்டு மிரட்டுவோா் மீதுகுண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:46 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை மிரட்டுபவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் பலா் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடன் கொடுத்த நபா்கள், கடன் பெற்ற நபா்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துவருவதாகவும், இதே போன்று பல தனியாா் நிறுவனங்களும் செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாக கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வாா்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.