தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், 14 போ் உள்பட இதுவரைகுணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது ஆண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது. 325 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.