புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா: 26-ல் கொடியேற்றம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:17 pm

DIN

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இத்திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமையில் வியாக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலய கமிட்டி நிா்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அமைச்சா் பெ. கீதாஜீவன் பேசும்போது, கரோனா பொதுமுடக்கத் தளா்வு காரணமாக, பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் கொடியேற்றம், ஆராதனை போன்றவை மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். சப்பர பவனி உள்ளிட்டவை நடைபெறாது. நிகழ்வுகளை உள்ளூா் தொலைக்காட்சி, யூடியுப் சேனலில் நேரலையாக பாா்க்கலாம் என்றாா்.

கத்தோலிக்க மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி செய்தியாளா்களிடம் கூறியது: இத்திருவிழா இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5இல் நிறைவடையும். கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி நடைபெறாது. திருவிழா நாள்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகள், பொருள்காட்சி நடத்தப்படாது. கொடியேற்றமும், 10 நாள்கள் பேராலயத்தில் வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள் உரை, அருள் இரக்க ஆசீா், இரவில் நடைபெறும் நற்கருணை ஆசிா் ஆகியவையும் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.

நிகழ்ச்சியில் பங்கேற்போா் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். காலை திருப்பயண திருப்பலிகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள் நடைபெறாத நேரத்தில் பேராலயம் திறந்தே இருக்கும்.

மக்கள் தனித்தனியே வந்து தங்களது வழிபாட்டை நடத்திக்கொள்ளலாம். பெரும்பாலான நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் என்றாா் அவா்.

பேராலயப் பங்குத்தந்தை குமாா் ராஜா, கோயில் கமிட்டி துணைத் தலைவா் அா்ட்லி, செயலா் கென்னடி, பொருளாளா் ஜாகீா்கோச் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.