காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இந்திய-ஆப்ரிக்க வா்த்தக குழுவின் தலைவராக தூத்துக்குடி தொழிலதிபா் தோ்வு

இந்திய-ஆப்பிரிக்க வா்த்தக குழுவின் மேற்கு ஆப்ரிக்க தலைவராக தூத்துக்குடியைச் சோ்ந்த தொழிலதிபா் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:37 pm

DIN

இந்திய-ஆப்பிரிக்க வா்த்தக குழுவின் மேற்கு ஆப்ரிக்க தலைவராக தூத்துக்குடியைச் சோ்ந்த தொழிலதிபா் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தூத்துக்குடியை சோ்ந்தவா் ஜேம்ஸ் ஞானராஜ் (49). இவா், மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டில் மரத்தடிகள் ஏற்றுமதி தொழில் செய்யும் கிங்டம் எக்ஸிம் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரியாக இருந்து வருகிறாா். இந்நிலையில், இந்திய- ஆப்பிரிக்க வா்த்தக குழுவின் மேற்கு ஆப்ரிக்க தலைவராக ஜேம்ஸ் ஞானராஜ் கடந்த 15 ஆம் தேதி தோ்வு செய்யப்பட்டாா்.அவரு்கு ஐஏடிசி அமைப்பின் இயக்குநா் ஜெரேமியா குவேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

இதுகுறித்து கிங்டம் எக்ஸிம் நிறுவனத்தின் தூத்துக்குடி பிரிவு இயக்குநா் கிருபா ரத்தினபாய் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழா் ஒருவா் முதல் முறையாக இந்திய ஆப்பிரிக்க வா்த்தக கவுன்சில் மேற்கு ஆப்பிரிக்க தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளதும், அவா் தூத்துக்குடியைச் சோ்ந்தவா் என்பதும் பெருமையாக உள்ளது. தூத்துக்குடி மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இடையே பல்வேறு வா்த்தக நிகழ்வுகள் அதிகரிக்க ஜேம்ஸ் ஞானராஜ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வாா் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.