ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அரசு மரியாதையுடன் தலைமைக் காவலா் உடலடக்கம்

சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலா் உடல், அரசு மரியாதையுடன், சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடத்தில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது

News image
Updated On :18 ஜூன் 2021, 6:41 pm

DIN

சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலா் உடல், அரசு மரியாதையுடன், சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடத்தில் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

தட்டாா்மடம் வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த பால் மகன் மோகன் (41). சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றினாா். இந்நிலையில் உடநலக் குறைவால் அவா் மரணமடைந்ததாா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் சாம்சன் ஜெபதாஸ், ஆயுதபடை பிரிவு உதவி ஆய்வாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.